கொல்கத்தா:
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகுல் ராய், கடந்தாண்டே பாஜக-வுக்கு ஓடிவிட்டார். இந்நிலையில், அவரது மகனும், மேற்குவங்கத்தின் பீஜ்பூர் தொகுதி எம்எல்ஏ-வுமான சுப்ரங்சூ ராயும், பாஜக-வுக்குத் தாவுவதற்கு தயாராகி விட்டார். இதையடுத்து சுப்ரங்சூ ராயை, மம்தா பானர்ஜி, கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார். ஆனால், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத சுப்ரங்சூ ராய், “இனி என்னால் நிம்மதியாக மூச்சு விட முடியும்; என் வழியை பின்பற்றி மேலும் பலர் பாஜகவில் சேருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.